மீண்டும் நடுங்குமா தமிழகம்?
திருச்சி:
தமிழகத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைஉணர்வு மைய இயக்குநர் பேராசிரியர் எஸ்.எம்.ராமசாமி கூறினார்.
தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும், கேரளாவிலும் கடந்த டிசம்பர் மாதம் நிலநடுக்கம்ஏற்பட்டது.
இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய இயக்குநர் ராமசாமி நிருபர்களிடம்கூறியதாவது:
இந்திய வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையில் மோதுகிறது. இதனால் இந்தியா மண்புழு போல் வளைகிறது.கொச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை பூமி மேல் நோக்கி எழும்பியும், பொள்ளாச்சி, கோவையில் இருந்துபுதுக்கோட்டை மாவட்டம் மணல் மேல்குடி வரை பூமி கீழ் நோக்கி வளைந்தும், சென்னையில் இருந்து மங்களூர்வரை பூமி மேல் நோக்கி எழும்பியும் இருப்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இப்படி இமயமலை அடிவாரம் வரை பூமி மண்புழு வடிவில் மேலே எழும்பியும், கீழே வளைந்தும் மாறியதால்,வடக்கு தெற்காக பூமியில் வெடிப்புக்கள் சமீபகாலமாக நகர்ந்து வருகின்றன.
இதனால் தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. தமிழகத்தின் சமவெளிகளில் வடகிழக்கு,தென்மேற்காக பூமியில் வெடிப்புக்கள் காணப்படும் பகுதிகளில் பூமி அதிர்ச்சியின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இது பொதுவான ஆய்வுதான். இன்னும் இதை தீர்க்க ஆய்ந்து எதிர்காலத்தில் மிகப்பெரிய கட்டிடங்கள்கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதே போல் இந்தப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்கள், அணைக்கட்டுக்கள்,ஆலைகள் ஆகியவற்றை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் நிலநடுக்கம் எப்போதுஏற்படும் என்று கூற முடியாது.
பூமியில் வடகிழக்கு - தென்மேற்காக உள்ள வெடிப்புக்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளனஎன்றார்.












Click it and Unblock the Notifications