ஹஜ் .. சிறப்பு விமானம் விடுகிறது ஏர் இந்தியா
சென்னை:
ஹஜ் யாத்திரைக்காக சென்னையிலிருந்து ஜெட்டா நகருக்கு ஏர் இந்தியா சிறப்புவிமான சேவையை துவக்க உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 -ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒரு விமானத்தில்315 ஹஜ் யாத்ரிகர்களை ஏற்றிச் செல்லும் விதமாக சிறப்பு விமான சேவையை ஏர்இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக ஹஜ் கமிட்டி கூட்டம் வருவாய்துறை அமைச்சர் ரகுமான்கான் தலைமையில்நடந்தது. இந்த கூட்டத்தில் யாத்ரிகர்களுக்கு ஹஜ் செல்வதற்கு எந்த விதமானஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரிகர்கள் பாய்த்புல் ஹுஜாஜ்ஜில் யாத்திரைசெய்யும் நாட்களுக்கு இரன்டு நாள் முன் வந்து அவர்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அவர்கள் செல்ல வேண்டிய விமானம் குறித்த விவரங்களையும், பயணத்திற்குதேவையான ஆவணங்களையும் அப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்தகூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பயணிகள் திரும்பி வருவதற்கான விமானம் மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து ஏப்ரல்மாதம் 3-ம் தேதிவரை இயக்கப்படும் என அந்த குழு மேலும் தெரிவித்தது.
1998-ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த காஜாமொய்தீனின்பெற்றோருக்கு ஹஜ் யாத்திரைக்கு பயணத் தொகையில் 50 சதவிகிதம் சலுகையும், ரூ37,500 உதவித் தொகையும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஹஜ் யாத்திரிக்கை செல்ல சிறந்த விதத்தில் உதவி செய்த ஏர்இந்தியா, விமான நிலைய ஆணையம், சுங்கத்துறை மற்றும் குடியேற்றப் பிரிவு, சிவில்விமான போக்குவரத்து மற்றும் போலீசுக்கும் அமைச்சர் விருதுகள் வழங்கிகவுரவித்தார்.
யு.என்.ஐ.