Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனத்துறை அலுவலகத்தில் வீரப்பன் கும்பல் தாக்குதல்?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் வனத்துறை சரக அலுவலகத்திற்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய முகமூடிக் கும்பல்அங்கிருந்த மூன்று காவலர்களை தாக்கி விட்டு, அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களைத் திருடிக்கொண்டு தப்பியது.

சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சரக அலுவலகத்தில் சம்பவம் நடந்தபோது கருணாநிதி,ராஜமாணிக்கம், சின்னப்பையன் ஆகிய காவலர்கள் பணியில் இருந்தனர். அதிகாலையில் முகமூடி அணிந்த ஒருகும்பல் அங்கு வந்தது.

பணியில் இருந்த மூன்று காவலர்களையும் தாக்கிய அவர்கள் பின்னர் அலுவலகத்தில் இருந்த ஒரு ஒற்றைக் குழல்துப்பாக்கி, ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி, மூன்று சுற்று துப்பாக்கித் தோட்டாக்கள், ரூ. 7500 பணம் ஆகியவற்றைஎடுத்துக் கொண்டு தப்பினர்.

கொள்ளையர்களைத் தடுக்க ராஜமாணிக்கம் முயன்றார். கும்பலை நோக்கி அவர் சுட்டபோது, அது தவறுதலாககருணாநிதி மீது பட்டது. இதில் அவரது காயில் காயம் ஏற்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திற்கு ஐ.ஜி. ஜெகன்னாதன் சென்று பார்வையிட்டார். வீரப்பன் கும்பல் இந்தத் தாக்குதலில்ஈடுபட்டிருக்கலாம் என்ற செய்தியை போலீஸார் மறுத்துள்ளனர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+