For Daily Alerts
Just In
5 ராணுவ வீரர்களின் மனைவிக்கு நிதியுதவி
சென்னை:
போரில் உயிர்நீத்த 5 ராணுவ வீரர்களின் மனைவிக்கு தலா ரூ. 50,000 உதவித் தொகைவழங்கப்பட்டது.
ராணுவ நல நிதியிலிருந்து இந்தத் தொகை அளிக்கப்பட்டது. ராணுவ தினத்தையொட்டிசென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பிரிகேடியர் ஜே.எஸ்.நாயர் இந்த உதவியை 5பேரிடமும் வழங்கினார்.
இந்த ஐந்து பேரும் கன்னியாக்குமரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள். இந்தியா, சீனாவுக்கிடையே நடந்த போர், காஷ்மீர், நாகலாந்து,இலங்கை ஆகிய பகுதிகளில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது இறந்த ஐந்துராணுவ வீரர்களின் மனைவியர் இவர்கள்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, January 15, 2001, 5:30 [IST]