சின்னப்பிள்ளைக்கு விருது வழங்கினார் கருணாநிதி
சென்னை:
மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளையை தமிழக முதல்வர் திங்கள்கிழமைதிருவள்ளுவர் தினத்தையொட்டி நடந்த விழாவில் கவுரவித்தார்,
மதுரையின் புலிசேரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண்மணிக்கு அவரதுகிராமத்தில் சிறந்த சமூக சேவை செய்ததற்காக பிரமதர் வாஜ்பாயால் ஸ்ரீ சக்தி புரஸ்கார்விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் போது அனைவர் நெஞ்சும் நெகிழும்விதமாக சின்னப்பிள்ளையின் காலை தொட்டு வணங்கினார் பிரதமர்.
அதன் பின்னர் சின்னப்பிள்ளையை தமிழக அரசு கவுரவிக்கும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சென்னை திருவள்ளுவர் கோட்டத்தில்திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் கருணாநிதி சின்னப்பிள்ளையைகவுரவித்தார்.
திங்கள்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழா முக்கியமாக குறள்பீட விருதுபெற்றவர்களுக்கு விருது வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவாகும்.இந்த நிகழ்ச்சியிலேயே சின்னப்பிள்ளையையும் கவுரவிக்க முடிவு செய்த முதல்வர்கருணாநிதி சின்னப்பிள்ளைக்கு ரூ 1 லட்சம் அடங்கிய பொற்கிழியை பரிசாக வழங்கிகவுரவித்தார்.
குறள்பீட விருதுகள்:
இந்த விழாவில் குறள்பீட விருதுகள் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.பேராசிரியார் ஞானசம்பந்தனுக்கு குறள் பீட விருதும், அய்யன் திருவள்ளுவர் விருதுமுனைவர் வா.மு. சேதுராமனுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் பல பிரிவுகளில் குறள் பீட விருது பெற்றோர் விவரம் வருமாறு:
கவிதை பிரிவில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும், அறிவியல் துறையில் மணவைமுஸ்தபாவுக்கும், கிராமியக் கலையில் முனைவர் லோர்டுக்கும், சிறந்த மொழிபெயர்பாளருக்கான விருது சேஷநாராயணனுக்கும், ஆய்வியல் விருதுஇளவேனிலுக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக காலை கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழ் மொழி மற்றும்பண்பாட்டு வளர்ச்சி துறை அமைச்சர் தமிழ்குடிமகன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறைஅமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோர் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
யு.என்.ஐ.