For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டுவீச்சிலிருந்து உயிர் தப்பினார் பரூக் அப்துல்லா

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவீச்சு நடந்தது.அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஹப்பாகாதலில் இருக்கும் புதிய பாலம் ஒன்றைதிறந்து வைத்து பேசினார். அவர் பேச்சை முடிக்கும் தருவாயில் தீவிரவாதிகள் துப்பாக்கிள்மூலம் எறியும் இரண்டு குண்டுகளை வீசினர்.

இதில் ஒரு குண்டு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்த நதியில் விழுந்தது.மற்றொன்று கூட்டம் நடந்த இடத்திற்கு 100 அடி தொலைவில் விழுந்து வெடித்தது.

இந்த வெடிகுண்டுகள் ஃபரூக் அப்துல்லாவை குறி வைத்து எறிந்ததாக கூறப்படுகிறதுகுண்டுகள் தள்ளிவிழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும்அதிர்ஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து போலீசார் எதிர் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள்பாபாநெம் என்ற பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்ததாக்குதலுக்கு ஹிஸ்புல் மூஜாஹுதின் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

குண்டு வீச்சிற்கு பின்பும் தொடர்ந்து பேசினார் ஃபரூக் அப்துல்லா. அவர் பேசுகையில்,துப்பாக்கி குண்டுகளால் என்னை பயமுறுத்த முடியாது. காஷ்மீரில் மீண்டும் அமைதியைகொண்டு வர வேண்டும் என்ற என் முடிவை இது போன்ற சம்பவங்கள் மூலம் மாற்றமுடியாது.

காஷ்மீர்அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீர்மக்கள் பிரதிநிதிகளை இணைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற ஹரியாத்மாநாட்டின் கோரிக்கையை ஏற்க முடியாது. இதனால் எந்த விதமான பயனும் ஏற்படாதுஎன பேசினார்.

ஃபரூக் அப்துல்லா பேசி முடித்தவுடன் அவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாகஅழைத்துச் சென்றனர். மாலை அவர் ஜம்மு கிளம்பி சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X