பாம்பன் கடலில் 4 இலங்கை மீனவர்கள் கைது
மதுரை:
இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த 4 இலங்கை மீனவர்களை இந்தியகடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இலங்கையில்நடைபெற்று வரும் சண்டை காரணமாக அங்கிருந்து வரும் அகதிகளைகண்காணிக்கவும், விடுதலைப் புலிகளை கண்காணிக்கவும், அகல்பாய் என்ற இந்தியகடற்படையைச் சேர்ந்த கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
சனிக்கிழமை இந்த கப்பல் பாம்பன் கடற் பகுதியில் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தபோது 14 கடல்மைல் தூரத்தில் மீன்பிடி விசைப்படகு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
நந்தினி என்ற பெயர் கொண்ட அந்த விசைப்படகிலிருந்த சார்லஸ் (49), இஸ்பெரீஸ்(42), ராஜபக்ஷா (54), தயாஸ்ரீ (24) ஆகிய நான்கு பேரும் இந்திய கடல் எல்லையைஅத்துமீறி கடந்ததற்காக கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பேரும் மீனவர்கள் எனவும், இவர்கள் இலங்கையின் டான்களா பகுதியைச்சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications