மேட்ச் - பிக்சிங் முக்கிய குற்றவாளி கைது
லண்டன்:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் சாவ்லா,ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
லண்டணில் துணிக்கடை வைத்திருக்கும் சஞ்சீவ் சாவ்லா இந்திய மற்றும் சர்வதேசஅளவில் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி வந்தார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சென்ற ஆண்டு விளையாடிய போதுதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலைவர் ஹான்சி குரோனியேவுடன் சஞ்சீவ்சாவ்லா மேட்ச் பிக்சிங் தொடர்பாக செல் போனில் நடத்திய பேச்சு வார்த்தைகளைடெல்லி போலீசார் பதிவு செய்தனர்.
தென்னாப்பிரிக்க அணி சென்ற இடங்களுக்கெல்லாம் இவர் சென்று அவர்கள் தங்கியஓட்டலிலேயே தங்கி பேரம் பேசி வந்தார். இந்த விஷயம் டெல்லி போலீசாரால்கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணித் தலைவர் ஹன்சிகுரோனியே உள்ளிட்ட சூதாட்டத்திற்கு உடந்தையாக இருந்த தென்னாப்பிரிக்கவீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த ஏஜென்டுகளானசர்மா, இந்தி நடிகர் கிஷன் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சஞ்சீவ் சாவ்லா லண்டனில் வசித்து வருவதால் அவரை கைது செய்ய ஸ்காட்லாந்துயார்டு போலீசின் உதவி நாடப்பட்டது.
இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிரிஸ் லூயிஸ் தனக்கு லஞ்சம் தர சாவ்லாமுயன்றதாக வாக்குமூலம் தந்தார்.இது குறித்து விசாரணை செய்த ஸ்காட்லாந்து யார்டுபோலீஸ், வடக்கு லண்டனில் ஹென்டண் என்ற இடத்திலிருக்கும் சாவ்ாலவின்வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.
இவரிடம் கிரிக்கெட் விசாரணை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குரோனியே இவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளதால் அவரிடமும் விசாரணைநடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த முகேஷ் குப்தா என்ற சூதாட்ட ஏஜென்டிடம் சி.பி.ஐ. விசாரணைசெய்த பின்தான் பல உண்மைகள் வெளியாகின. இதனடிப்படையில்தான் அசாருதீன்,பிரபாகர், ஜடேஜா, அஜய் சர்மா மற் றும் வெளிநாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட்சூதாட்டத்தில் இருந்த தொடர்பு வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாவ்லா கைது செய்யப்பட்டிருப்பதால் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில்பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications