கூட்டணியில் முறிவு இல்லை .. ம.தி.மு.க. கூறுகிறது
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே உறவில் முறிவு ஏதும் இல்லை என்று மத்திய மரபு சாராஎரிசக்தித் துறை அமைச்சரும், மதிமுக பொருளாளருமான கண்ணப்பன் தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதனை தேசியஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி தீர்த்து வைப்பார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். இதனையேகட்சிகளிடையே உறவு முறிவாகக் கருதக் கூடாது.
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பது பற்றி பிரதமர் வாஜ்பாய் இந்தியாதிரும்பிய பின்னர் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
மரபுசாரா எரிசக்தியில், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளோம். மரபு சாராஎரிசக்திக் கொள்கை தயாராக உள்ளது.
ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் ஒரு லட்சம் யூனிட் மின்சாரத்தில் 2.7 சதவீதம் மரபு சாரா எரிசக்தியால் உற்பத்திசெய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மரபு சாரா எரிசக்தியின் மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டது என்றார் கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications