ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் .. இந்தியா தகுதியிழந்தது
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் திங்கள்கிழமை துவங்கவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டியில் விளையாட இந்தியாவின் லியாண்டர் பயசும், நிரூபமாவைத்தியநாதனும் தகுதி பெறவில்லை.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் திங்கள்கிழமை துவங்குகின்றன.
இதற்கான தகுதிப்போட்டிகள் மெல்போர்ன் பூங்காவில் நடந்தன. ஒற்றையர் பிரிவில்விளையாட இந்தியாவின் லியாண்டர் பயசும், நிரூபமா வைத்தியநாதனும் முயன்றனர்
தகுதிச் சுற்று போட்டியில் மூன்றாவது சுற்றில் லியாண்டர் பயஸ் தென் ஆப்பிரிக்காவின்மார்க்ஸ் ஆந்திரஸ்காவுடன் மோதினார். பயஸ் 6-3. 5-7, 3-6 என்ற நேர் செட்களில்தோல்வியடைந்தார்.இதனால் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன்டென்னிசில் ஆடும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
பெண்கள் பிரிவு போட்டியில் இந்தியாவின் நிரூபமா, பிரான்ஸ் வீராங்கனைஅலெக்ஸாண்ட்ரா புசாயுடன் மோதினார். இவரும் 5-7, 6-2, 2-6 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தார். இதன் முலம் பெண்கள் பிரிவிலும் விளையாடும்தகுதியை இந்தியா இழந்தது.












Click it and Unblock the Notifications