நோபல் பரிசுக்கு ஆசைப்படுகிறார் வாஜ்பாய் .. சுவாமி
சென்னை:
பிரதமர் வாஜ்பாயியின் காஷ்மீர் கொள்கை மிகவும் அபாயகரமானது என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் தொடர்பான பிரதமர் வாஜ்பாயியின்அணுகுமுறைகள், செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவை, நாட்டை சீர்குலைக்கக் கூடியவை. நாட்டின்பிரிவினையில்தான் இது முடியும்.
ஹூரியத் மாநாடு என்ற மூன்றாவது உறுப்பினரை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையில் நுழைக்கபிரதமருக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியல் சட்டப் பிரிவு ஒன்றை மீறுவதாகும்.
இந்தியாவுடன், காஷ்மீர் இணைந்து இருக்க வேண்டும் என்றுதான் அரசியல் சட்டப் பிரிவு ஒன்று கூறுகிறது,பிரிவினை குறித்து அது பேசவில்லை. மாறாக, இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்க வேண்டும், என்று ஹுரியத்மாநாடு அமைப்பு கூறி வருகிறது.
ஹூரியத் அமைப்பினர் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச முடியும் என்றால், காஷ்மீர் பண்டிட்டுகள் (காஷ்மீர்இந்துக்கள்) கூட சமாதானம் குறித்துப் பேச முடியும். அவர்களும் இந்தியர்கள்தானே, அவர்களை மட்டும்புறக்கணிப்பது நியாயமாக இருக்காது.
பாகிஸ்தானின் முஷாரப்புடன் பேச ஒரு பக்கம் பிரதமர் வாஜ்பாய் மறுக்கிறார். மறு பக்கம்,ஹூரியத் அமைப்புபோன்ற பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிக்கிறார். காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுடன்மட்டுமே பேச வேண்டும், ஹூரியத் அம்ைபபுடன் பேசக் கூடாது.
நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக சோவியத் யூனியனைக் கூறு போட்டார் கார்பசேவ். அது போல,தனக்கும் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேச நலனை தியாகம் செய்யத் துணிந்து விட்டார்வாஜ்பாய் என்று கூறியுள்ளார் சுவாமி.