ராணுவ தினம் .. சென்னையில் அஞ்சலி
சென்னை:
ராணுவ தினத்தையொட்டி சென்னையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவஅதிகாரிகள் மலர் வளையம் வைத்து போர் வீரர்களை நினைவுகூர்ந்தனர்.
1949-ம் ஆண்டு இதே நாளில்தான் பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, சுதந்திரஇந்தியாவின் முதலாவது இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக, ஜெனரல்பூச்சரிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்த நாளை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் ராணுவதினம் அனுசரிக்கப்படுகிறது. போர் நினைவுச் சின்னத்தில், ஜெனரல் கமாண்டிங்அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெய்சங்கர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உலகிலேயே அதிக அளவிலான வீரர்களைக் கொண்டதாக இந்திய ராணுவம்திகழ்கிறது. சேவை, தியாகம், தேசப்பற்று ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டுவிளங்கும் இந்திய ராணுவம், நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களையும்அடக்கியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.