காஷ்மீர் சண்டை நிறுத்தம் .. வாஜ்பாய்க்கு ஜெ. கோரிக்கை
சென்னை:
காஷ்மீர் போர் நிறுத்தத்தை இந்தியா வாபஸ் பெற வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயை கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று கட்சி தலைமை அவர் சிலைக்க மாலையளித்த பின்நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலும்,பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட தாக்குதலும், டெல்லி செங்கோட்டையில்நடத்தப்பட்ட தாக்குதலும் சண்டை நிறுத்தம் எந்த விதமான பயனையும்அளிக்கவில்லை என்பதை நன்கு விளக்குகிறது.
சண்டை நிறுத்தத்தை அறிவிக்கும் முன் பிரதமர் முக்கிய கட்சி தலைவர்களுடன்ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.
நாட்டின் ஒற்றுமையிலும், பாதுகாப்பிலும் மத்திய அரசு மேலும் கவனம் செலுத்தவேண்டும். பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாககண்டிக்கத்தக்கது.
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பத்மனாபன் சண்டை நிறுத்தம் தொடர வேண்டும்என எந்த கருத்தின் அடிப்படையில் கூறியிருக்கிறார் என்பது தெரியவில்லை எனகூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications