புயல் சேத மதிப்பீடு .. மத்திய நிபுணர் குழு வந்தது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சேதத்தை மதிப்பிடுவதற்காக 5 பேர்கொண்ட மத்திய நிபுணர் குழு புதன்கிழமை பாண்டிச்சேரிக்கு வந்தது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் கே.பி.மிஸ்ரா தலைமையிலான அந்தக் குழுவினர்பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு புயல் சேதத்தை மதிப்பிடுவர்.
புதன்கிழமை பாண்டிச்சேரி அரசு அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். வியாழக்கிழமைதலைமைச் செயலாளருடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள். 19-ம் தேதி காரைக்கால் செல்கின்றனர்.
புயல் சேத இழப்பீடாக ரூ. 52 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசிடம் பாண்டிச்சேரி அரசு கோரியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications