சேரியில் வாழும் பாகிஸ்தான்
கராச்சி:
பாகிஸ்தான் நகர்ப்புற மக்கள் தொகையில் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சேரிப் பகுதியில்தான் வாழ்வதாகஅரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசு சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், பாகிஸ்தான் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்வெளியாகியுள்ளது. அதில், பாகிஸ்தான் நகர்ப்புறங்களில் போதுமான வீட்டு வசதி இல்லை. இதனால் நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் சேரிகள், குடிசைப் பகுதிகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சேரி மற்றும் குடிசைப் பகுதிகளில் சுகாதாரக் குறைவு, குடிநீர்ப் பற்றாக்குறை உள்பட பல அடிப்படை வசதிகள்மிகவும் குறைவாகவே உள்ளன. கல்வி வசதியும் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையாககிடைப்பதில்லை.
1998-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 32.5 சதவீதம் மக்கள் நகர்ப்புறப் பகுதிகளில்வசிக்கிறார்கள். இங்கு மக்கள் தொகை சதவீதம் 3.5 சதவீதமாக இருக்கிறது. பொருளாதார காரணங்களுக்காகநகர்ப்புறங்களுக்கு இடம் பெயரும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நகர்ப்புறங்களில் ஏழ்மை நிலை குறைவாகவே உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் இது மிக அதிகமாகஇருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications