For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அ.தி.மு.க.வுடன் சேர மாட்டோம் .. பா.ம.க

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெள்ளிக்கிழமைதிட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர நாங்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எங்கள் கட்சி சார்பில் யாரும் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. பாட்டாளிமக்கள் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிக்கும்.

அண்மையில் எங்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வர் அவரிடம் கூறுகையில், வாழப்பாடிராமமூர்த்தி பிரச்சனை தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி பேசுவதாக அறிவித்தார் என்றார் மணி.

இதற்கிடையே தமிழகத்தில் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றும், இதுதொடர்பாகபேச்சுவார்த்தை நடத்த பா.ம.க வைச் சேர்ந்த ஒருவர் விரைவில் அ.தி.மு.க தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X