சண்டை நிறுத்தம் நீடிக்காது .. எச்சரிக்கிறார்கள் புலிகள்
கொழும்பு:
இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தால் சண்டைநிறுத்தத்தை நீடிக்க மாட்டோம் என்றுவிடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர்.
விடுதலைப்புலிகள் கடந்த மாதம் 24 ம் தேதி இரவு சண்டைநிறுத்தத்தை அறிவித்தனர். சண்டைநிறுத்தம் ஒரு மாதகாலம் வரை அதாவது ஜனவரி 24 ம் தேதி வரை இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
புலிகளின் சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை அரசு நிராகரித்து விட்டது. தொடர்ந்துஇலங்கை ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் செய்தித்தொடர்பாளர் ஆண்டன் பாலசிங்கம் வெள்ளிக்கிழமைவெளியிட்டுள்ள அறிக்கை:
புலிகளின் சண்டைநிறுத்தத்தை மதிக்காவிட்டால் முழு அளவில் தாக்குதலைத் தொடுப்போம். ராணுவ வீரர்களைகட்டுக்குள் கொண்டு வந்துதான் அமைதிப் பேச்சுவார்த்தை பற்றி ஆலோசிப்போம்.
எங்களது நிலை குறித்து நார்வே நாட்டுத் தூதர், இலங்கை அமைச்சர் கதிர்காமரிடம் தெளிவாகக் கூறி விட்டோம்.இலங்கை அரசுக்கு நாங்கள் போதுமான கால அவகாசம் கொடுத்து இருக்கிறோம். இதற்கு மேலும் வளைந்துகொடுக்க மாட்டோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆண்டன் பாலசிங்கம்.












Click it and Unblock the Notifications