சோவைச் சந்தித்தார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா, துக்ளக் ஆசிரியரும், எம்.பி.யுமான சோ.ராமசாமி வீட்டிற்கு சென்று அவருடன் ஒன்றரை மணி நேரம்பேச்சுவார்த்தை நடத்தினார்.

சமீபத்தில் ஜெயலலிதா துக்ளக் அலுவலகத்துக்குச் சென்று சோவை சந்தித்துப் பேசினார். வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன், அ.தி.மு.க.கூட்டணிவைத்துக் கொள்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தத்தான் இருவரும் சந்தித்துப் பேசினார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் இதை இருவரும் மறுத்தனர். நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்கள். அதனால்தான் நாங்கள் சந்தித்துப் பேசினோம் என்று அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் சந்திப்பு:

இதற்கிடையே சோ வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஜெயலலிதா சென்றார். மாலை 6.30 மணி வரை அவர்கள் இருவரும்பேசினார்கள்.

ஜெயலலிதாவும், சோனியாவின் பிரதிநிதியாக வரும் பிரணாப் முகர்ஜியும் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த சூழ்நிலையில்ஜெயலலிதாவும், சோவும் சந்தித்துப் பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து சோ கூறுகையில், நானும், ஜெயலலிதாவும் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடத்தவில்லை. என்னுடைய மகளும்,பேத்தியும் ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களையும், எங்களையும் பார்த்து சாதாரணமாக குடும்பநலம் குறித்து விசாரித்து விட்டுப்போவதற்காகத்தான் ஜெயலலிதா வந்தார்.

மாலை 5 மணிக்கு வந்த ஜெயலலிதா 6.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார் என்றார் சோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+