தி.க.வின் மனிதச் சங்கிலி ..திரண்டு வந்தன கட்சிகள்
சென்னை:
ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் படுகொலை செய்யப்பட்ட 2 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை சென்னை உள்பட தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில திராவிடர் கழகம் தலைமையில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
ஒரிசாவில் ஆஸ்திரேலிய பாதிரியாரும், அவரது இரண்டு மகன்களும் 2 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து திராவிடர் கழகம்சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.
இதில், தி.க. தவிர, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிட கழகப்பொதுச் செயலாளர் கி.வீரமணி, அதிமுக, சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்கள் கலந்துகொண்டனர்.
மதுரையில் நடந்த மனிதச் சங்கிலிப் திராவிடக் கழக தொண்டர்கள், சிபிஐ, மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சி, த.மா.கா., அதிமுக, ஜனதா தளம், விடுதலைசிறுத்தைகள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், நாட்டு தேசியஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இருக்கும்படியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications