பெண் பிணத்தை காளிக்கு பலி கொடுத்தவர் கைது
தஞ்சாவூர்:
சாலை விபத்தில் இறந்த பெண்ணின் உடலை தோண்டியெடுத்து, அந்த உடலைவீட்டுக்குள் வைத்து ரசித்த பின்னர், காளிக்கு காணிக்கையாக்கியவர் கைதுசெய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரிலுள்ள பட்டாரு கிராம மக்கள் கடந்த 4நாட்களாக தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் காளி கோயில் பகுதியில் துர்நாற்றம்வருவதாக போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து அங்கு கிடந்த ஒரு பெண்ணின் உடலைக் கைப்பற்றினர்.அந்த உடல் ராகம்மாள் என்பவருடையது. ராகம்மாள் ஜனவரி மாதம் 13-ம் தேதிசாலை விபத்தில் இறந்து போனார் என்பதும் அதே நாள் அவர் உடல் சவக்குழியில்புதைக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்தது.
ஆனால் புதைக்கப்பட்ட உடல் எப்படி பூமிக்கு மேலே வந்தது என்று போலீஸார்குழம்பினர். இந்த நிலையில் ஜெகதீசன் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட முன்னாள்ராணுவ வீரர் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெகதீசனை போலீஸார் கைது செய்தனர். ஜெகதீசனை போலீசார்விசாரணை செய்த போது, முதலில் சவக்குழியிலிருந்து இறந்து போன பெண்ணின்உடலை தோண்டி தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் பின் காளி கோவிலில்கொண்டு போய் வைத்ததகாவும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications