எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுத்தாளுக்கு பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகளுக்கு முன்பே கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுக்கவல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அன்பழகன் சட்டசபையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

அவர் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கூறியதாவது:

தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு முன்பே கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

அதன் முதல்கட்டமாக முன்னாள் பள்ளி, கல்லூரி இயக்குநர்கள் கோபால், சிவஞானம் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வித்தாள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் இரண்டு சாவிகள் கொண்டு பூட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கடுமையாக இருந்தாலும் கேள்வித்தாள்கள் வெளியாகி விடுகின்றன. இந்த முறை கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுக்க அதிகமானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்வுத்தாள்கள் வெளியாவதற்கு யாரேனும் காரணமாக இருந்தால் அவர்கள் மேல் நீதிமன்றம்மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அன்பழகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+