காஷ்மீரில் கடும் உறைபனி
ஸ்ரீநகர்:
கடும் வறட்சியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காஷ்மீர் மக்களின் வேண்டுதல் நிஜமானது. மாநிலம் முழுவதும் வறட்சி மறைந்து உறைபனிப்படலமாகக் காட்சியளிக்கிறது.
திங்கள்கிழமை காலை முதல் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை முதல் மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளிலும் உறைபனி ஏற்பட்டது. இதனால் விமானப்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும்பனி காணப்படுகிறது. சாலைகள் முழுவதையும் உறைபனி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. மரங்கள்,வீடுகளின் கூரைகள் என அனைத்து இடங்களையும் உறைபனி சூழ்ந்து கொண்டுள்ளது.
திடீரென்று மாநிலம் முழுவதும் பனிப்படலம் ஏற்பட்டதையடுத்து குழந்தைகள் அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.
இருப்பினும் பனியினால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. பல வீடுகளில் மின்சாரம் தடைபட்டது. குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
சுற்றுலாத்தலங்களான பாகல்காம், யஸ்மார்க், சோனா மார்க், தேக்ஷம், கேகெர்நாக், யஸ்மார்க் பகுதிகளில் 2 அடி வரை பனி படிந்திருந்தது. பிரசித்திபெற்ற அமர்நாத் குகைக்கோவிலில் பனி தொடர்ந்து பெய்து வருகிறது.
யு.என்.ஐ.