இந்தியா, பாக். ரயில் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
டெல்லி:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ரயில் போக்குவரத்து அடுத்த 3 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதாரி நகருக்கும், பாகிஸ்தானில் வாகா பகுதிக்கும் இடையே இருந்து வரும் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அடுத்த 3 வருடங்களுக்குநீட்டிப்பது என இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர் அதிகாரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இரு தரப்பு ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து நாட்கள் சந்தித்துப் பேசிய பிறகு அவர்கள் இந்த ரயில் போக்குவரத்தை நீட்டிப்பது என முடிவு செய்தனர்.
இந்திய ரயில்வே போக்குவரத்து அதிகாரி எஸ்.எஸ்.பண்டாரி மற்றும் பாகிஸ்தான் ரயில்வே பொது மேலாளர் அப்துல் கயாம் ஆகியோர் இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே சம்ஜதா எக்ஸ்பிரஸ் வாரம் இரண்டு முறை இருந்து வருகிறது. அமிர்தசரஸ் வரை ரயில்போக்குவரத்து நீட்டிக்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய நிராகரித்து விட்டது.
இந்தியா தரப்பில் கூறுகையில், அமிர்தரஸ் வரை ரயில் போக்குவரத்தை நீடித்தால் அதை பாகிஸ்தான் மக்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆயுதங்கள்,வெடிமருந்துகள், மற்றும் கள்ள நோட்டுக்களை அந்த ரயில் மூலம் கடத்தி வருகிறார்கள். இதைத் தடுப்பதற்காகவே அமிர்தசரஸ் வரை ரயில்போக்குவரத்துக்கு இந்தியா அனுமதிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே 1976 ம் ஆண்டு முதல் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இருந்து வருகிறது. அது தொடர்பான ஒப்பந்தம் 1990ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 1994 ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் 1997 ம் ஆண்டுடன் முடிந்தது. அதே ஆண்டு இந்த ஒப்பந்தம்புதுப்பிக்கப்பட்டது. 2001 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications