காங்கோவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
நைரோபி:
காங்கோவில் வாழும் அமெரிக்கர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடுமாறு என்று அமெரிக்கா திங்கள்கிழமைஅறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வானொலி செய்தியில், காங்கோவில் அதிகமாக அமெரிக்க நாட்டவர் வாழ்கின்றனர். காங்கோவில் தற்போது பிரச்சனைநிலவுகிறது. காங்கோவில் உள்ள அமெரிக்க மக்கள் அவசியம் இல்லாமல் அங்கே இருக்கவேண்டியதில்லை. அவர்கள் தங்கள் நாட்டுக்கு முடிந்த அளவுஅதிவிரைவில் திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டது.
காங்கோ அதிபர் கபிலா சுட்டுக்கொல்லப்பட்ட 6 நாட்களில் அமெரிக்கா இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காங்கோவில் கடந்த வாரம் திடீரென அதிபர் லாரன்ட் கபிலா வை அவரது மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றார். காங்கோவின் புதிய அதிபராகஅவரது மகன் ஜோசப் கபிலா பொறுப்பேற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட கபிலாவுக்கு இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications