பாண்டி.யில் போலீசை தாக்கியவர்களுக்கு வலை வீச்சு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உதவி சப்-இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் ரவுடிகளால்தாக்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
லாஸ்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி சப் -இன்ஸ்பெக்டர்நாச்சிமுத்துவும், கான்ஸ்டபில் ராஜுவும் ஊர்காவல் படை காவலர் சிவகுமாருடன்இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடிருந்தார்கள்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் 3 பேர் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள்சரியாக பதில் சொல்லாத காரணத்தால் அந்த வண்டி கடத்தப்பட்டிருக்கலாம் என்றசந்தேகத்தில் அந்த வண்டியை சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் வந்தவர்கள் ஸ்குரூ டிரைவரால் சப்-இன்ஸ்பெக்டரைதாக்கி விட்டு தப்பி விட்டனர்.
மார்பிலும், தோளிலும், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் நாச்சிமுத்துவும் தலையிைல்காயமடைந்த ராஜுவும் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்,ஐ












Click it and Unblock the Notifications