நதியை மாசுபடுத்திய நிறுவனம் மீது நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பவானி ஆற்றை அசுத்தப்படுத்தி வரும் தென்னிந்திய விஸ்கோஸ் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கப்படும் என்று சட்டசபையில் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தமிழ் மாநில காங்கிரஸ் துணை சபைத்தலைவர் லட்சுமணன், பவானி ஆறு விஸ்கோஸ்தொழிற்சாலையால் அசுத்தப்படப்பட்டு வருவதையும், அதைத் தடுத்து நிறுத்தும் படியும் கூறினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் பழனிவேல்ராஜன், கூறுகையில், லட்சுமணன் கூறியது சரியே. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

முன்னதாக, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், லட்சுமணன் கூறியது போல் பவானி ஆறு அசுத்தப்பட்டுக்கிடக்கிறது. தென்னிந்திய விஸ்கோஸ் தொழிற்சாலைக் கழிவுகள் இந்த பவானி ஆற்றில் கலக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்த அரசு உரியநடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே இந்தத் தொழிற்சாலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மீறியது தொடர்பாக ரூ 10 லட்சம் அபராதம் கட்டியது.சில நாட்கள் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. பின்னர் அந்த நிறுவனத்தை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றார்.

ஆனால் த.மா.கா. உறுப்பினர்கள் அமைச்சரின் இந்த பதிலால் திருப்தியடையவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,தென்னிந்திய விஸ்கோஸ் தொழிற்சாலைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+