மரம் கடத்திய பேராசிரியர் சஸ்பெண்ட்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை சார்பில் வளர்க்கப்பட்ட மரங்களைவெட்டி கடத்தியதற்காக பல்கலைக்கழக சுற்றுப்புற சூழல் கட்டுப்பாட்டு துறைஇயக்குனராக இருந்த பேராசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தோட்டக்கலைசார்பில் வளர்க்கப்பட்டு வந்த சவுக்குமரங்களை வெட்டி கடத்தியதாக பல்கழைக்கழகசுற்றுப்புற சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை இயக்குனராக இருந்த பேராசிரயர்அப்பாசி மீது புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..பல்கலைக்கழக நிர்வாகம்பேராசிரியர் அப்பாசியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
அப்பாசி வகித்து வந்த சுற்றுப்புறச் சூழல் மாசுக்கட்டுப்பாடு பொறுப்பை வேறொருஅதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications