பா.ஜ.க மூத்த தலைவர் விஜயராஜே மரணம்
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரும், பா.ஜ.க.மூத்த தலைவருமான விஜயராஜே சிந்தியா வியாழக்கிழமை காலை அப்பல்லோமருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 82. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜனவரி 2 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மூன்று நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை அதிகாலைமரணமடைந்தார்.
விஜயராஜேவுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் வசுந்தரா ராஜே சிந்தியா சிறுதொழில் வளர்ச்சித்துறை அமைச்சர். நாடாளுமன்றஎதிர்க்கட்சி துணைத் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா இவரது மகன். இவரது மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும்பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.