வீரப்பனைப் பிடிப்போம் ... கேரள முதல்வர் சபதம்
திருவனந்தபுரம்:
கேரள காட்டுக்குள் வீரப்பன் நுழைந்திருந்தால் அவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்வோம் என்று கேரள முதல்வர் நாயனார்வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் நாயனார் நிருபர்களிடம் பேசுகையில், 55 வயதாகும் சந்தனக் கடத்தல் வீரப்பன் கேரள காட்டுக்குள்நுழைந்திருக்கலாம் என்று தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகக் எங்களிடம் கூறியுள்ளார்கள்.
ஆனால் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் கேரள காட்டுக்குள் ஊடுருவியிருக்கிறார்களா என்பது குறித்து எங்களுக்குத் தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை.
கூட்டு அதிரடிப்படை போலீஸார் எங்களிடம் வீரப்பனைப் பிடிப்பதற்கு உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். வீரப்பன் கேரளாவுக்குள்நுழைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கூட்டு அதிரடிப்படை போலீஸார் மற்றும் கேரள போலீஸார் சேர்ந்து பாலக்காடு மாவட்டம் சிருவாணிபகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றார் நாயனார்.
யு.என்.ஐ.