For Daily Alerts
Just In
கும்பமேளா ... பஸ் - வேன் மோதலில் 5 பக்தர்கள் சாவு
கும்பா நகர்:
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் கும்பாநகரில் பக்தர்கள் வந்து கொண்டிருந்த வேன் மீது தனியார் பஸ் மோதியதில் 5 பக்தர்கள் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தர்.
இவ்விபத்தில் மேலும் 3 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவ்விபத்து கும்பாநகரிலிருந்து 30கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹர்சன்காஞ்ச் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை காலை நடந்தது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேக விழா நடக்கும். நதிகள் சங்கமிக்கும்இடத்தில் நீராடினால் மறு பிறவி கிடையாது என்றும், பாவங்கள் நீங்கி விடும் என்பதும் ஐதீகமாகும். இதனால் இங்கு புனித நீராடுவதற்காகஇந்தியாவிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கோடிக்கணக்கில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, January 25, 2001, 5:30 [IST]