போலி அடையாள அட்டை ... விசாரிக்க உத்தரவு
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் போலி வாக்காளர் அடையாளை குறித்துவிசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் சுந்தரம் புதன்கிழமை சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேரிலும், மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் பேரிலும் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டிருப்பது குறித்துகேள்வி எழுப்பினார்.மேலும் தி.மு.க. ஆட்சியில் தேர்தல் முறை கேடுகள் நடந்து வருகிறது என குற்றம்சாட்டினார்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தை இதுகுறித்து விசாரணை செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சட்டசபையில் வியாழக்கிழமை அவர் கூறுகையில், நான் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துஅவருக்கு தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாளத்தை பார்த்து உறுதி செய்துகொண்டேன்.
முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் புதன்கிழமை சட்டசபைக்கு வரவில்லை . முதல்வர்கருணாநிதி மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் பெயரில் வெளிவந்த வாக்காளர்அடையாள அட்டை குறித்து விசாரிக்க தேர்தல் கமிஷனிடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications