இந்தியா - துபாய் உறவு வலுப்படும்
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளுடன் உள்ள உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
இதன்முதல் கட்டமாக இந்திய வெளியுறவுத்துறை மூத்த அமைச்சர் ஒருவர் குவைத் சென்று அங்குள்ளதலைவர்களை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கே.வி.ராஜனும், குவைத் வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்வஷ்பான்சிங்கும் நேரடியாகச் சந்தித்துப் பேசினார்கள்.
ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சவுதி அரேபியா சென்றிருந்தார். இதையடுத்துவெளியுறவுத்துறை செயலாளர் ராஜன் சென்றதால் துபாய் மற்றும் இந்தியாவின் உறவு வலுப்படும் என்றுநம்பப்படுகிறது.
இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ராஜன், குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் சாப் அல் அகமது,துணை பிரதமர் ஷேக் சலீம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இவர்கள் பொருளாதாரத்தில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் பாதுகாப்பு, தகவல்தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ராஜனின் குவைத் சுற்றுப்பயணம் இரு நாட்டு உறவையும் இன்னும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுஎன்று தெரிகிறது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications