தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை வராது
சென்னை:
தமிழ்நாட்டில் வரவிருக்கும் 3 ஆண்டுகளுக்கு மின்சார பற்றாக்குறை இருக்காது என தமிழக மின்சாரத்துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் வியாழக்கிழமை தி.மு.க. எம்.எல்.ஏ., செங்கை சிவம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மணிமற்றும் த.மா.கா. எம்.எல்.ஏ. அப்பாவு, ஞானசேகரன் ஆகியோர் மின்சாரம் தொடர்பான கேள்விகள் கேட்டனர்.இதற்கு பதிலளிக்கையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்கள் மூலமாக 350 மெகாவாட்மின்உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் அமைப்பது குறித்து அவர்களுடன் பேச்சு வார்த்தைநடத்திவருகிறோம்.
அவர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ 4 கேட்கிறார்கள். ரூ 3-க்கு மேல் கொடுத்தால் மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படும்.தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தேவை.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 6 ஆயிரத்து 400 மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எனவே மற்றமாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் குறைவான மின் அழுத்தம் இருக்காது.காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதை தமிழக அரசு ஊக்குவிக்கிறது.
காற்றாலை மூலமாகவோ, தனியார் மூலமாகவோ உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மூன்றாவது நபருக்குவிற்பனை செய்யக்கூடாது என அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது என கூறினார்.












Click it and Unblock the Notifications