ஒரே மேடையில் ஜெ. மூப்பனார் பேச்சு
சென்னை:
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 29 ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. மாநாட்டில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.
மாநாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று அதன் பொதுச்செயலர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
இதில் பங்கேற்பதற்காக ஜனவரி 28 ம் தேதி ஜெயலலிதா திருச்சி செல்கிறார். மாநாட்டில் த.மா.கா.தலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரதராஜன், சமூக நீதிக் கட்சியின் தலைவர்ஜெகவீரபாண்டியன், குடியரசுக் கட்சித் தலைவர் தமிழரசன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் உள்ளோட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மாநாடு மதச்சார்பற்ற அணியின் தேர்தல் பிரசார மாநாடாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications