சென்னையில் நிலநடுக்கம் ... உயிர்ச்சேதம் இல்லை
சென்னை:
இந்தியாவின் குடியரசு தினமான வெள்ளிக்கிழமை சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தமிழகம், ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை, காலை 8-50 மணியளவில் , ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். வீடுகளில்வைக்கப்பட்டிருந்த பொருட்கள் இடம்பெயர்ந்து கீழே விழுந்தன.
சென்னையில், தியாகராய நகர், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், நெற்குன்றம், முகப்பேறு போன்ற இடங்களில் நிலநடுக்கம்உணரப்பட்டது. மேலும், தஞ்சாவூர், கடலூர், மற்றும் தென் ஆற்காடு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது, பாண்டிச்சேரியில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்ற இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேற முயற்சித்ததால்,நிகழ்ச்சி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நிலநடுக்கம், 3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மச்சிலிப்பட்டினத்திலும், மக்கள் நிலநடுக்கத்தால்பாதிக்கப்பட்டனர். இந்த மூன்று மாநிலங்களிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து விவரங்கள் எதுவும்இதுவரை கிடைக்கவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications