சென்னை வந்தார் ராஜ்குமார்
சென்னை:
வீரப்பனால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் மருத்துவ சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை சென்னை வந்தார்.
சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை மாலை, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
ஜூலை 30 ம் தேதி நடிகர் ராஜ்குமார் (76), வீரப்பனால் கடத்தப்பட்டார். அதற்குப் பின் பெரும் சிரமங்களுக்கிடையில் அவர் மீட்கப்பட்டார்.
பெங்களூர்திரும்பிய ராஜ்குமார், தன்னை மீட்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதிஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் தனக்கு மருத்துவசிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்துள்ளார். அவருடன் அவரது மகன் ராகவேந்திர ராஜ்குமார்,கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரும் வந்துள்ளனர்.
ராஜ்குமார் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நான் மருத்துவசிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்துள்ளேன். நான் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசலாம் என்றுநினைத்திருக்கிறேன்.
வீரப்பன் என்னை காட்டில் எப்படிப் பார்த்துக் கொண்டார் என்று அனைவரும் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் வீரப்பன் நல்லவர்.நேர்மையானவர். ஏதோ ஒரு கசப்பினால் குற்றவாளியாகிவிட்டார். காட்டில் அவர் என்னை மிகவும் உபசரித்தார்.
வீரப்பனுடன் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தீவிரவாதிகளா, விடுதலைப்புலிகளா என்று எனக்கு எதுவும் தெரியாது. நான் விடுவிக்கப்பட்டதேதி குறித்து பலர் குழப்பிக் கொள்கிறார்கள். உண்மையைச் சொன்னால் நான் நவம்பர் 14 ம் தேதி விடுவிக்கப்பட்டேன் என்றார் ராஜ்குமார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications