கீழ் கோர்ட்டுகள் 6 நாட்கள் இயங்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கீழ் கோர்ட்டுகள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்ற உத்தரவை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைத்திருப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தேங்கிக் கிடக்கும் பல வழக்குகளையும் குறைக்கும் விதமாக 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் எனமுடிவெடுக்கப்பட்டது. இதற்காக சனக்கிழமைகளில் கீழ் கோர்ட்டுகள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இதன் பின்பு சனிககிழமைகளில் கிழ்கோர்ட்டுகள் இயங்குவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 4 வாரங்களுக்குநிறுத்தி வைக்கப்படுவதாக தலைமை நீதிபதி ஜெயின் கூறினார். ஆயினும் தமிழகத்தின் பல மாவட்டங்களில்வக்கீல்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயினை பல்வேறு வக்கீல்கள் சங்கத்தினர் சந்தித்து தங்கள்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மறு உத்தரவு வரும்வரை சனக்கிழமைகளில் கீழ் கோர்டு இயங்குவதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஜெயராமன்தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 29-ம் தேதி முதல் வக்கீல்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+