ஓட்டுநர்கள் பிரச்சனையை தீர்க்கத் தயார் ... முதல்வர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள அரசு வாகன ஓட்டுநர்கள் அனைவரும் தங்கள் வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஏதாவதுபிரச்சனையிருந்தால் உடனடியாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சனிக்கிழமைதெரிவித்தார்.
பாண்டிச்சேரி அரசு பஸ்களில் ஓட்டுநர்களாக வேலை செய்து கொண்டிருக்கும் போது மரணமடைந்த ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி முதல்வர்சண்முகம் பேசுகையில், ஓட்டுநர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அரசு காத்திருக்கிறது.
அதனால் அரசு வாகன ஓட்டுநர்கள் தங்கள் வேலையில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுநர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து அரசுஅதிகாரிகளுடன் மனம் திறந்து பேசலாம். ஓட்டுநர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications