முழுவீச்சில் நிவாரணப்பணி
டெல்லி:
டெல்லியிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து குஜராத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
ஏர்இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், குஜராத்தில் மிகவும் அத்தியாவசியமாக அவசரமாக நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் இடங்களுக்குமும்பையிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள் குஜராத்துக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால் அவர்கள் உடனடியாக டெல்லியிலுள்ள ஏர்இந்தியா அலுவலகத்தைத்தொடர்பு கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களும் இலவசமாக நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு குஜராத்சென்றுள்ளன.
மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும பகுஜ் மாவட்டங்களுக்கு சிறப்புவிமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை கொடுத்து வருகின்றன.
ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மருந்துப்பொருட்கள், கம்பளிகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. மகராஷ்டிரா அரசு அளித்துள்ளநிவாரணப்பொருட்களையும் அவைகள் எடுத்துச் சென்றுள்ளன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக போயிங் 737 - 400 ரகவிமானங்களும் பகுஜ் மற்றும் அஹமதாபாத்துக்குப் பறந்துள்ளன.
யு.என்.ஐ.