தேர்தல் கூட்டணிக்குத் தயாராகிறது காங்கிரஸ்
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து அடுத்த மாத இறுதியிலோ அல்லதுமார்ச் மாத துவக்கத்திலோ முடிவு செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் முதல்கட்ட பேச்சு வார்த்தைதான் நடத்தியுள்ளார். முகர்ஜி மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தைநடத்துவார்
தேர்தலில் தொகுதிகள் கேட்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சி தலைமை எடுக்கும் எந்தமுடிவையும் மாநில காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும்.
எம்.ஜி.ஆர்.கணக்குப்படி தேர்தலில் சீட் கேட்குமா என்பது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை எனகூறினார்.
கட்சியில் இருக்கும் உள்கட்சி பூசல் குறித்து நிருபர்கள் கேட்ட போது தங்கபாலு மீதும் மற்றவர்கள் மீதும் ஒழுங்குநடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். அவர்கள் கட்சி தலைவர் சோனியா காந்தியின் தலைைமைஎதிர்க்கிறார்கள் என கூறினார்.
யு.என்.ஐ.