பூகம்பம் பற்றி ராஜ்குமார்..
பெங்களூர்:
பூகம்பம் எங்கும் எப்போதும் வரலாம் என கார்கில் வீரர்களின் குடும்பத்திற்கு நிதிவழங்கும் நிகழ்ச்சியில் கன்னட நடிகர் ராஜ்குமார் தெரிவித்தார்.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு பொதுமக்களிடமிருந்துகலைஞர்கள் வசூலித்த நிதியை வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது.
விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த கார்கில் நினைவு சின்னத்திற்கு அஞ்சலிசெலுத்திய பின் பேசிய நடிகர் ராஜ்குமார் இந்த வயதில் கூட எல்லைப்பகுதிக்குச்சென்று போரிட்டு உயிரிழந்தால் நாடு மதிக்குமே என நினைக்கத் தோன்றுவதாககுறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், குஜராத் பூகம்பத்தில் பலர் பலியாகி உள்ளனர். அந்த பூகம்பம்இங்கு வராது என நினைப்பது தவறு. பூகம்பம் எங்கு வேண்டுமானாலும் வரலாம்,எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார். பல்வேறு கதாபாத்திரங்களில் தான்சிறப்பாக நடித்ததாக மக்கள் கருதினால் அதற்கு காரணம் இறைவனே என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய கன்னட நடிகர் சங்கத் தலைவர் அம்பரீஷ், நாட்டைக் காக்கும்பணியில் உயிரிழந்தால் கவலைப்படக் கூடாது. ஏனெனில், இந்த வாய்ப்புஎல்லோருக்கும் கிடைக்காது என்றார்.
நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கர்நாடக அமைச்சர்கள் மல்லிகார்ஜூன கார்கே,சந்திரசேகர், சிவகுமார் மற்றும் பல நடிக, நடிகைகள் கலந்து கொண்டனர்.
விழாவில் குஜராத் பூகம்பத்திற்கு நடிகர் அர்ஜூன் ஒரு லட்ச ரூபாயும், நடிகர் குமார்பங்காரப்பா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கினர்.