தொழிலாளர்கள் மோதல் .. 15 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம், ஓசூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில், தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஐ.என்.டி.யு.சி மற்றும் த.மா.கா. தொழிற்சங்கங்கதொழிலாளர்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் காயமடைந்தனர்.
திங்கள்கிழமையன்று ஓசூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த த.மா.கா. தொழிற்சங்க ஊழியர்கள்தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.
நிர்வாகம் அவர்களை வேலைக்கு அழைத்தும் வராத நிலையில் மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் ஐ.என்.டி.யு.சி. சங்கத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவர்அங்கு வந்தபோது அங்கிருந்த பெண் தொழிலாளர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.
மறுநாள் முனிராஜ் மற்றும் பலர் தொழிற்சாலைக்கு வந்து த.மா.கா.தொழிற்சங்க ஊழியர்களை தாக்கியதால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருசங்கங்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications