மனைவி, 4 குழந்தைகளைக் கொன்றவர் கைது
மதுரை:
மனைவி வேறொரு நபருடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகப்பட்டுமனைவியையும்,4 குழந்தைகளையும் தூங்கிக் கொண்டிருக்கும் போது அம்மிக்கல்லால் நசுக்கிக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் ராஜகோபால் (43). சிங்கப்பூரில் தச்சு வேலை செய்துவருகிறார். 6 மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார்.
ராஜகோபாலின் மனைவி திலகவதி (43). இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகளும்உள்ளன. திலகவதி சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு பின்திலகவதி தன் குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்துவந்தார்.
இந்த முறை வீட்டுக்கு வந்த ராஜகோபால் தன் மனைவி வேறொருவருடன் தொடர்புகொண்டிருப்பதாக சந்தேகம் கொண்டு கோபம் கொண்டார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் மனைவி, குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்களைக் கொல்ல முடிவு செய்தார். வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து முதலில் மனைவியைக் கொன்றார். தொடர்ந்து, பெண் குழந்தைகளானஅம்சவல்லி (13), தீபா (10), பாக்யலட்சுமி (8) ஆகியோரையும் கொன்றார்.
அம்மாவையும், அக்காக்களையும் தந்தை கொன்றதைப் பார்த்த 4 வயது மகன்வாசுமணி, தன்னைக் கொன்று விடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளான். ஆனால் சிறுவன்என்பதையும் பாராது, இரக்கம் கொள்ளாமல் அந்த சிறு பாலகனையும் கொன்றார்ராஜகோபால்.
ஐந்து பேரையும் கொன்ற பின்னர் ராஜகோபால் அங்கிருந்து தப்பினார். தகவல் அறிந்துவந்த போலீஸார் தீவிரமாகத் தேடி ராஜகோபாலைக் கைது செய்தனர்.
ராஜகோபாலிடம் விசாரணை செய்த போது, குழந்தைகள்அனாதைகளாகிவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களையும் கொன்றுவிட்டதாககூறினார்.
யு.என்.ஐ.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications