"3 மாதங்களில் மைசூர் தடா கைதிகள் விடுதலை
மேட்டூர்:
அடுத்த 3 மாதங்களில் மைசூர் சிறையில் இருக்கும் தமிழ் தடா கைதிகள் விடுவிக்கப்படுவர். இதற்கான விசாரணைதீவிரமாக நடந்து வருகிறது என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
மேட்டூர் அருகே உள்ள தண்டா, கோவிந்தப்பாடி, மேட்டுப்பாளையம் புதூர் உட்பட பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்தார் நெடுமாறன்.
இந்தப் பயணத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் நெடுமாறன் பேசுகையில், அடுத்த 3 மாதங்களில் மைசூர் சிறையில்தடா சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள 51 சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படுவர்.
இந்த கைதிகளின் மீதான விசாரணைக்காக மைசூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்த நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பாக வாதிட 3 வக்கீல்களை நியமனம் செய்துள்ளோம்.
வழக்கு விரைவாக முடிந்து தடா கைதிகள் விடுவிக்கப்படுவர். கடந்த 6 ம் தேதி முதல் இந்த விசாரணைதுவங்கியுள்ளது என்றார் நெடுமாறன்.