பெல் ஆலைக்கு "லம்ப் ஆர்டர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கடும் சர்வதேசப் போட்டிக்கிடையில் திருச்சி பெல் ஆலை 125 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்நாட்டு ஆர்டரைப் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின், ரேணுசாகர் மின்திட்டத்தின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்குத் தேவையான இரு ஸ்டீம் ஜெனரேட்டர்களை ஹிண்டால்கோ நிறுவனத்திற்குதிருச்சி பெல் நிறுவனம் தயாரித்து அளிக்க இருக்கிறது.
முதல் ஸ்டீம் ஜெனரேட்டர் 24 மாதத்திற்குள்ளும், 2வது ஜெனரேட்டர் 27 மாதத்திற்குள்ளும் தயாரித்து அளிக்கப்படும்.
முன்னதாக, ஒரிஸ்ஸாவில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மின்திட்டமான அங்குல் திட்டத்திற்காக 250 கோடி மதிப்புள்ள 120 மெகாவாட் தெர்மல்யூனிட்டை நிறுவுவதற்கான ஆர்டரையும் திருச்சி பெல் ஆலைப் பெற்றுள்ளது. நேல்கோ நிறுவனம் இந்த ஆர்டரை அளித்துள்ளது.
இதனை திருச்சி பெல் ஆலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications