கொலம்பிய விமானம் கடத்தப்பட்டு மீட்பு
கொலம்பியா:
நடுவானில் கடத்தப்பட்ட கொலம்பிய விமானம், விமான பைலட் மற்றும் பயணி ஒருவரின் முயற்சியால் மீட்கப்பட்டது.
கொலம்பியாவின் ஒரு பகுதி அந்நாட்டுத் தீவிரவாத இயக்கமான கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படையின் வசம் உள்ளது. கொலம்பியாவிலுள்ள சான்விசன்ட் விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனமான சதேனாவின் விமானத்தை தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக்கருதப்படும் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தினார்.
விமானத்தை தலைநகர் பொகோட்டாவிற்கு கடத்திய அவரை பயணி ஒருவரின் உதவியுடன் பைலட் மடக்கிப் பிடித்தார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாககொலம்பிய ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 32 பேர் பத்திரமாகமீட்கப்பட்டனர்.
கொலம்பிய அரசுக்கும், கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படைக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் நவம்பரில் தோல்வி அடைந்தது.இதையடுத்து தீவிரவாதிகள் வசம் அளிக்கப்பட்ட பகுதி பற்றி கொலம்பிய அதிபர் முடிவெடுப்பதற்கு 48 மணி நேரங்களுக்கு முன் இத்தகைய சம்பவம்நடைபெற்றுள்ளது. இது அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் முயற்சி என ராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications