For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"எமனுடன் மோதிய "பைரவன்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நாய்களால் துரத்தப்பட்டு குழியில் விழுந்த எருமை மாட்டைதீயணைப்பு துறை வீரர்கள் வந்து மீட்டனர்.

சேலம் கிச்சிப்பாளத்தைச் சேர்ந்த கலா, எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.சேலம் குகை பகுதியில் இந்த எருமை மாடு மேயந்து கொண்டிருந்தது.

அப்போது இந்த எருமை மாட்டைக் கண்ட நாய்கள் கும்பல் ஒன்று எருமை மாட்டைபார்த்து ஒரே சமயத்தில் குரைத்தன, இதனால் பயந்து போன எருமை மாடுஓடத்துவங்கியது, நாய்களும் விடமால் குரைத்துக் கொண்டே சேஸ் செய்தன.

சேசிங் முடிவில் எருமை மாடு கட்டிட வேலைக்காக வெட்டி வைக்கப்பட்டிருந்தகுழியில் விழுந்தது. அப்போதும் விடவில்லை நாய்கள்.

குழியைச் சுற்றி நின்று கொண்டு குரைத்து கெரோ செய்தன. நாய்களின் குரைப்பு சத்தம்கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து நாய்களை விரட்டி விட்டு எருமையைகுழியிலிருந்து மீட்க முயன்றனர்.

ஆனால் எருமையின் எடை அதிமாக இருந்ததால் அவர்களால் குழியிலிருந்துஎருமையை தூக்க முடியவில்லை. தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்புப் படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி எருமையை குழியிலிருந்து மீட்டுகலாவிடம் ஒப்படைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X