"லஞ்சம் வாங்கினால் அல்பாயுசு
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் நகர அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்திற்கு எதிராக பாங்காக் நகர மேயர் சமக் சுந்தரவேஜ்வித்தியாசமான நடவடிக்கையில் இறங்கியுளளார்.
நடைபாதைக் கடை வியாபாரிகளிடம் அங்குள்ள அதிகாரிகள் பணம் பெறுவதை வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். அவ்வாறு பெறுபவர்கள் தாங்கள்ஓய்வு பெறும் வரை கஷ்டத்தை அனுபவிப்பது மட்டுமல்ல பல நேரங்களில் அற்ப ஆயுளில் மடிவர் என்றும்;
அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் அதன் பயனாக இயற்கையின் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் லஞ்சத்திற்கு எதிராக அங்குள்ள 50நகராட்சி அலுவலகங்களுக்கும் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக வியாபாரிகளிடம் இருந்து வந்த புகார்கள் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதற்கு மேயர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோள்பலனளிக்காத நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக மேயரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
பாங்காக் மேயர் இவ்வாறு பேசுவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன்னர், தாய்லாந்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதற்கு காரணமானசர்வதேச நிதியமைப்பின் ஜியார்ஜ் சோரஸ் பாங்காக் வந்தால் தண்டிக்கப்படுவார் என்று கூறிவிட்டு பின்னர் அக்கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.