இயற்கைச் சீற்றத்தைக் குறைக்க ஒரு யாகம்
கோவை:
இயற்கை சீற்றம் தணியவும், உலகில் அமைதி ஏற்படவும் கோவையில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இயற்கை சீரழிவுகளைத் தடுக்க கோவைகமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாகம் நடத்த தீர்மானித்துள்ளார்.
மேலும், குஜராத்தில் பலியானோர் ஆன்மா சாந்தியடையவும் , இந்த இங்கு பிரார்த்தனை நடக்கவுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 9ம் தேதிவரை தினம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஐம்பூத வேள்வியும், 108 கலச வேள்வியும், நடக்கும்.
இந்த வேள்வியின் தொடக்கமாக நாளை காலை 6 மணிக்கு விநாயகர் வேள்வி நடக்கிறது. பின்னர் 11 மணி அளவில் நீர், நிலம், காற்று, பூமி,ஆகியவற்றிற்கு வழிபாடு நடக்கும். 108 மூலிகை வேள்வியும், நடைபெறும்.
ஒண்டிப்புதூரில் உள்ள சித்தர் பீடத்தில் இந்த யாகம் துவங்குகிறது. இங்கு முதலில் 136 விநாயகருக்குச் சிறப்பு வழிபாடு நடக்கும். 4 ம் ததி மாலை சனீஸ்வரபகவானுக்கு அபிஷேக வேள்வியும், 7ம் தேதி மாலை 12 ஜோதிலிங்கத்திற்கு வேள்வியும், 8ம் தேதி மாலை ஐம்பூத வேள்வியும் நடக்கிறது.
9ம் தேதி காலை 136 விநாயகர் பூஜையும், காலை 10 மணிக்கு நவக்கிரக வேள்வியும் நடக்கிறது. உலக நலனுக்காக நடைபெறும் இப் பிரார்த்தனையில்அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications