படம் பிடிக்க வாங்க .. இலங்கை அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த முன்வர வேண்டும் என்று இலங்கை தேசிய திரைப்படக் கழகத் தலைவர் திசா அபயசேகராஅழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை வந்த அவருக்கு, தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் பேசிய அபய சேகரா, இந்திய இலங்கைதிரைப்பட உலகத் தொடர்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத இடைவெளியை குறைக்க வேண்டும்.

தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் இலங்கையில் திரைப்படம் தயாரிக்கத் தேவையான எல்லா உதவிகளையும் இலங்கை அரசு செய்து தரும். இருநாட்டின் ஒற்றுமையைப்பலப்படுத்தும் முகமாக இது அமையும் என்று அவர் தெரிவித்தார்.

கில்டு அமைப்பின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார் அதன் செயலர் சிவப்பிரசாத். விழாவின் சிறப்பு அழைப்பாராக நடிகர்சரத்குமார் கலந்து கொண்டார்.

தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.திருப்பதி, உதவித் தலைவர்கள் எஸ்.தேவராஜ், என்.எஸ்.மூர்த்தி, செயலாளர் எம்.பாஸ்கர்,மற்றும் ராமகிருஷ்ணா, கிருஷ்ணசாமி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+